ராஜபாளையம் நகராட்சி மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டிகளில் சமூக விரோத செயல்கள். சி.சி.டி.வி., பொருத்தி கண்காணித்துகட்டுப்படுத்த வேண்டும்
ராஜபாளையம் சம்பந்தபுரம், டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி பகுதிகளில் ஏற்கனவே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகே கஞ்சா இளைஞர்கள் நடமாட்டம், மது அருந்துதல், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குளியல் போன்றசெயல்கள் நடந்துள்ளது.
ராஜபாளையம் நகராட்சி குடிநீருக்காக அய்யனார் ஆற்றில் இருந்து தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு குழாய் மூலம் நகர் பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை குடிநீர் தொட் டிகளில் சேமித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கூடுதல் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி புதிதாக 10 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப் பட்டு விநியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சுற்றி உள்ள இடங்களில் இளைஞர்கள், சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துவருகிறது.
இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் மேல்குடிநீர் தொட்டிகளில் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி கண்காணிப்பு கேமரா அமைத்து சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply